எனக்கு டைபாய்டு காய்ச்சல்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிச்சயம் நடக்கும் - அபிஜித் தீப்கே
டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடந்த 18-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை மற்றும் கோரிக்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் அபிஜித் தீப்கே...
"உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, கடந்த சில நாட்களாக எனக்கு உடம்பு சரியில்லை. ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன.
எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். தினமும் காலையிலும் மாலையிலும் IV போடுகிறார்கள்.
ஆனால், நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அந்தக் கரப்பான் பூச்சிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் சேர்ந்து இந்தப் போராட்டத்தைப் மாபெரும் வெற்றியாக்கியிருக்கிறீர்கள்.
உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியும், இந்தப் போராட்டத்தை இந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ததற்கு வாழ்த்துகளும்.
நாம் தொடர்ந்து இதேபோல் அமைதியான வழியில் போராடினால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நிச்சயம் நடக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மிக்க நன்றி!"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


