ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.! - ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான நாடுகள். ஈரானோ பொருளாதாரத் தடைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு.

ஆனால், அமெரிக்கா தந்து வரும் அனைத்துக் குடைச்சல்களையும் இப்போதும் தாங்கி வருகிறது ஈரான்.

மசூத் பெசெஷ்கியான் பதிவு

அதிபர் பதிவு

ஈரான் போர் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசு எப்போதும் போரை எதிர்த்தே வந்திருக்கிறது.

அமைதியைப் பேணுவதும் பிராந்தியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதுமே மோதல்களைத் தவிர்ப்பதில் உள்ளது என்றும் நம்புகிறது.

இருந்தாலும், இன்றுவரை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எப்படித் துணிச்சலாக நின்று தன் நாட்டைத் தற்காத்துக்கொண்டதோ,

அதேபோல ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் செயலுக்கு முற்றிலும் வருந்தும் வரை இந்த எதிர்ப்பை முழு வீச்சில் தொடர்ந்து முன்னெடுக்கும்.

அத்துடன், மாண்புமிகு ஈரானிய மக்களின் உரிமைகளுக்கான காவல் அரணாகவும் அது என்றும் திகழும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.