மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு - வேட்பாளர் திடீர் கைது!

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றார்.

இதில் பவானிபூர் தொகுதி என்பது மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதி. அரசியல் காரணங்களுக்காக பவானிபூர் தொகுதியின் எம்எல்ஏவாகச் சுவேந்து அதிகாரி தொடர முடிவு செய்திருக்கிறார்.

நந்திகிராம் தொகுதி

இதனால், 2016, 2021, 2026 என மூன்று தேர்தல்களில் தனக்கு வெற்றியைத் தந்து தந்த நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

2021-ஆம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி vs மம்தா பானர்ஜி என்று தேர்தல் களம் கண்டபோதும், சுவேந்து அதிகாரிக்கே வெற்றியைத் தந்தனர் நந்திகிராம் மக்கள் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

நந்திகிராம் தொகுதியில் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தாவிற்கு நெருக்கடி

ஆனால், அந்த வேட்பாளரோ வேட்புமனு தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சுவேந்து அதிகாரியைச் சந்தித்தார். இதன் விளைவாக, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.

இதில் மம்தாவிற்குக் கடுமையான நெருக்கடி. இதனால், மம்தா, ‘நாட்டின் நலனுக்காக’ காங்கிரஸ் அறிவித்த நந்திகிராம் வேட்பாளரை ஆதரிப்பதாக இன்று அறிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கைது

இதற்கிடையில் , காங்கிரஸ் வேட்பாளரான மிலன் பிரதானைக் கைது செய்திருக்கிறது மேற்கு வங்க போலீஸ். இவரது கைதுக்குப் பழைய கொலை வழக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

நந்திகிராமைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும்... மிலனுக்கு மம்தா கொடுக்கும் ஆதரவு பாஜகவிற்கு பின்னடைவாக அமையுமோ என்பதற்காகத்தான் சுவேந்து அதிகாரி இந்தக் கேம் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.