“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

தமிழ் சின்னத்திரை உலகில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். ‘பூவே பூச்சூடவா’, ‘அபி டெய்லர்’, ‘கிழக்கு வாசல்’ மற்றும் ‘செல்லமே செல்லம்’ போன்ற வெற்றிகரமான சீரியல்கள் மூலம் இவருக்கு ஏராளமான இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரும் சக நடிகர் மதன் பாண்டியனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பலரும் அறிந்ததே. இந்நிலையில், சமீப காலமாக இவர்களது திருமண வாழ்க்கை குறித்த சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

காதல் கணவன் மதன் பாண்டியனுக்கும், ரேஷ்மாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் கடந்த சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விரைவில் இருவரும் சட்டப்பூர்வ விவாகரத்து பெறவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by @RESHMA_MURALIDHARAN (@reshma_muralidaran_official)

இதற்கிடையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடிகை ரேஷ்மா முரளிதரன் தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருவதே இவர்களின் பிரிவுக்கு முக்கியக் காரணமாக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். குடும்பப் பாங்கான பிம்பத்தைக் கொண்டிருந்த ரேஷ்மாவின் இந்த திடீர் மேக்ஓவர் மற்றும் அதிரடியான போட்டோஷூட்கள் கோலிவுட் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த விவாகரத்து வதந்திகள் குறித்து இதுவரை நடிகை ரேஷ்மாவோ அல்லது மதன் பாண்டியனோ எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.