அமெரிக்கா தாக்குதல்: மனிதநேயம் இருந்தால் இதை தடுத்து நிறுத்துவார்களா? - ஈரான் அதிபர் காட்டம்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தற்போது அமெரிக்கா தெற்கு ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானிய மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்.
ஈரான் அதிபர் பதிவு
இந்தத் தாக்குதல் குறித்து மசூத் பெஜெஷ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கர்கள் உண்மையான வீரர்கள் என்றால், எங்களது வீரம் மிக்க ராணுவப் படைகளுடன் நேரடியாகப் போரிடட்டும்.
அதை விட்டுவிட்டு, மக்களின் அடிப்படை உள்கட்டமைப்புகள், உணவு விநியோகம் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்?
அவர்களுக்குள் மனிதநேயம் இருந்தால், மக்களுக்கான நீர், உணவு மற்றும் மருந்துகள் கிடைப்பதைத் தடுத்து நிறுத்துவார்களா?
அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்துவிடும் மக்கள் எங்களது மக்கள் அல்ல. ஈரான் சரணடையாது” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரானை எப்படியாவது வழிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற அமெரிக்காவின் முயற்சிதான் இந்தத் தாக்குதல்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

