சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’ (Seyon). உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடிக்கவுள்ளார். மேலும் சிங்கம்புலி, அருள் தாஸ் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை பின்னணியைக் கொண்ட ஒரு கிராமத்து மற்றும் அதிரடி கமர்ஷியல் கலந்த கதையாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த கட்டப் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ திரையரங்க வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.