மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு.
மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்களில் ஏறும் பயணிகள் சில நேரங்களில் இரண்டு மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அப்படி பயணம் செய்யும் பயணிகளில் சிலர் ஒன்று சேர்ந்து பஜனைப் பாடுவது, சீட்டு விளையாடுவது என்று பொழுதைக் கழிப்பதுண்டு. பஜனைப் பாடுவதற்குச் சிறிய மேளம் மற்றும் இசைக்கருவியைக் கூட பயணிகள் வீட்டில் இருந்து எடுத்து வருவதுண்டு.
அது போன்று போன்று சில பயணிகள் ரயிலில் விளையாடுவதற்காக சீட்டுக்கட்டு எடுத்து வருவதுண்டு. கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே ரயில் புறப்படும் போதே அவர்கள் ஏறிவிடுவதால் இருக்கையில் அமர்ந்து கொண்டு சீட்டு விளையாடுவது வழக்கம்.
அது போன்று பயணிகள் சிலர் மும்பை ரயிலில் சீட் விளையாடும் வீடியோ வைரலாகி இருக்கிறது. 59023 எண் கொண்ட மும்பை சென்ட்ரல்-வல்சாட் பாஸ்ட் பாசஞ்சர் பயணிகள் ரயிலில் பல இருக்கைகளை ஆக்கிரமித்து பணம் கட்டி சிலர் சீட்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
பணம் சம்பந்தப்பட்ட சீட்டாட்டத்தில் ஈடுபடும் பயணிகள் குழு பல இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளதை அந்த வீடியோ காட்டுகிறது. ரயிலில் ஏற்கனவே பயணிகள் நிரம்பியிருந்தனர். அப்படிப்பட்ட கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அவர்கள் அதிகமான இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதால் மற்ற பயணிகளுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சில பயணிகள் கூட்டத்தில் நிற்க கூட முடியாத நிலையில் நின்றனர். எனவே இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டு விளையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


