இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.

தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.

இதையொட்டி மெலோனிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் மோடி.

“இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய பெருமையைப் பெற்ற எனது தோழி, பிரதமர் மெலோனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோடி, மெலோனி

இந்த மைல்கல், இத்தாலி மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

இந்தியா - இத்தாலி இடையிலான சிறப்புமிக்க மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அவரது நட்புறவு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

நம் இரு நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக அவருடனான இந்த நெருங்கிய கூட்டுப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.”

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இத்தாலி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மெலோனி.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின், இத்தாலியை 1,413 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.