இந்திய - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லையா? என்ன காரணம்?

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

 

இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு முக்கிய சிக்கலாக மாறியுள்ளது ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி. குவாட்ரிசெப்ஸ் காயத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் ஹர்திக், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலென்ஸில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக பந்துவீச்சை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது கம்பேக் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

 

ஹர்திக் பேட்டிங் மற்றும் உடல் இயக்கத்தில் பெரிய பிரச்சினை இல்லாமல் இருந்தாலும், முழுமையான உடல்தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகே அவரை அணியில் சேர்க்க பிசிசிஐ மருத்துவக் குழு முடிவு செய்யும் என கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கும் தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பது தேர்வுக்குழுவின் முடிவில்தான் உள்ளது.

 

அதே நேரத்தில், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்திலிருந்து நல்ல முறையில் மீண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.