Congress: 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! - அமைச்சர் விஸ்வநாதன்

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார்.

அமைச்சர் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக பெரிய வெற்றியைத் தமிழகத்தில் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியும், இப்போது தவெகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், "2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், மூன்று முறை, 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். 2029-இல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு நாங்கள் ஒத்த குரலில், ஒற்றைக்கட்டையாக நிற்போம்" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.