நான் உயிரோடுதான் இருக்கிறேன்; வதந்திகளை நம்பாதீர்கள்- செஃப் தாமு
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருக்கும் செஃப் தாமு சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி சீசன்-7 செமி பைனலில் பங்கேற்கவில்லை.
இதனைத்தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் செஃப் தாமுவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், " குக் வித் கோமாளி செஃப் தாமு அதிர்ச்சி மரணமடைந்திருக்கிறார் என்று வதந்தி ஒன்று பரவி இருக்கிறது.
கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செமி ஃபைனலில் பங்கேற்க முடியவில்லை, ஃபைனலில் பங்கேற்றேன்.
உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். அதனால் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சீக்கிரமே நான் திரும்பி வருவேன். நான் உயிரோடுதான் இருக்கிறேன்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


