சாப்பிட்டியான்னு கேட்டேன், அதுக்கு என் மகன் வயிறு நிறைய தண்ணி குடிச்சிட்டு.!- கலங்கிய சூரி அம்மா

விடுதலை, கொட்டுக்காளி, கருடன், மாமன், படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

வெற்றிமாறனின் விடுதலை படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

மண்டாடி

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரியின் அம்மா, " என் மகன் இந்த மேடையில் வந்து நிற்பான் என்று கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை.

இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாள் எங்கள் ஊரில் விழா ஒன்று நடந்தது. அப்போது பலருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன்.

தனது தாயுடன் நடிகர் சூரி
தனது தாயுடன் நடிகர் சூரி

அந்த நேரத்தில் என் மகன் எனக்கு போன் செய்தான். சாப்பிட்டியா பா? என்று கேட்டேன். அதற்கு அவன், வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிட்டேன் அம்மா என்று சொன்னான்.

அதை என்னால் தாங்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட நிலையில் இருந்தவன் இந்த நிலைக்கு வந்திருக்கிறான்" என்று கண்கலங்கப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.