TNPL 2026 : திருச்சியை திணறடித்த ஹாட்ரிக் விக்கெட்... சாதனை படைத்த தீபன் லிங்கேஷ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடர் இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க சிறந்த மேடையாக மாறியுள்ளது.

பேட்ஸ்மேன்கள் சதம், அரைசதம் விளாசி கவனம் ஈர்த்து வரும் நிலையில், பந்துவீச்சில் அரிய சாதனை படைத்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் கோவை கிங்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தீபன் லிங்கேஷ்.

அவரது இந்தச் சாதனை, ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026 குவாலிஃபையர்-2 போட்டியில் நிகழ்ந்தது. கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 183/5 ரன்கள் குவித்தது.

கோவை கிங்ஸ்

184 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. புதிய பந்துடன் வந்த தீபன் லிங்கேஷ், தனது முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியின் ரன் சேஸை சிதைத்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத திருச்சி அணி 99 ரன்களுக்கு சுருண்டது. 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

ஒரு ஹாட்ரிக் என்பது எந்தப் பந்துவீச்சாளருக்கும் சிறப்பான சாதனைதான். ஆனால், இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் பதிவு செய்வது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பந்துவீச்சாளரின் துல்லியம், திட்டமிடல் மற்றும் மன உறுதி ஆகிய மூன்றும் ஒன்றாக வெளிப்படும் தருணமாகவே கிரிக்கெட் உலகம் இதைப் பார்க்கிறது.

ஒரே போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளிலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சாதனையாக கருதப்படுகிறது.

அதையே செய்து காட்டியுள்ள தீபன் லிங்கேஷ், ஒரு போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நடப்பு TNPL தொடரிலேயே, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கோவை அணியின் முக்கிய ஆயுதங்களில் ஒருவராக தீபன் லிங்கேஷ் உருவெடுத்திருந்தார்.

தீபன் லிங்கேஷ்
தீபன் லிங்கேஷ்

புதிய பந்திலும், நடு ஓவர்களிலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த அவர், திருச்சிக்கு எதிரான போட்டியில் அதை வரலாற்று சாதனையாக மாற்றினார். TNPL வரலாற்றிலும் இது ஒரு முக்கிய மைல்கல்.

TNPL போட்டியில் தனது முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தீபன் லிங்கேஷ் படைத்துள்ளார்.

TNPL என்பது பல இளம் வீரர்களின் கிரிக்கெட் கனவுகளுக்கான முக்கிய மேடையாக இருந்து வருகிறது. அந்த மேடையில் வெறும் மூன்று பந்துகளில் உலக சாதனையைத் தொட்ட தீபன் லிங்கேஷ், இனி ஒரு போட்டியின் நாயகனாக மட்டும் அல்ல; தமிழ்நாட்டு கிரிக்கெட்டின் எதிர்கால ஸ்பின் நம்பிக்கையாகவும் கவனிக்கப்பட வேண்டிய வீரராகவும் உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.