ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

 

 

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ரன்களும் விளாசி அசத்தினர். இதுதவிர ரிஷப் பந்த் 63, ஷுப்மன் கில் 50, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் சேர்த்தனர்.

 

503 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும், பசிந்து சூரியபண்டாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சூரியபண்டாரா 80 ரன்கள் எடுத்தார். பின்னர் சோனல் தினுஷா பொறுப்புடன் விளையாடி 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

 

இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மனவ் சுதாரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 83.4 ஓவர்களில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியை விட இலங்கை இன்னும் 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், இந்த 2 விக்கெட்டையும் இலங்கை சீக்கிரம் இழந்தால் ஃபாலோ ஆன் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.