Jailer 2: என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.! - ஜெயிலர் 2 நடனம் குறித்து நடிகை பூர்ணா
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி, அதில் நடித்திருந்த நட்சத்திரங்கள் என இவையெல்லாம்தான் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளான அல்ல போலேலோ பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்தப் பாடலில் நடிகை பூர்ணா நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலில் நடனமாடியிருப்பது குறித்து நெகிழ்ச்சியாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "சிறுவயதிலிருந்தே எனக்கு நடனம்தான் எல்லாம். ஒரு நடன ஆசிரியராக வேண்டும் என்பதுதான் எப்போதும் என் மிகப்பெரிய கனவாக இருந்தது.
இன்று துபாயில் அந்தப் ஆசை நனவானதைக் கண்டு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.
ஒரு சூப்பர் ஹீரோவுடன் இணைந்து நடனமாட வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டதுண்டு. ஆனால், ஒருநாள் ரஜினிகாந்த் சாரின் படத்தில் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லை.

என் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றை நனவாக்கியதற்கும், என் நடனத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்துப் பாராட்டுகள், அன்பு மற்றும் ஊக்கத்திற்கும் நெல்சன் சாருக்கு மிக்க நன்றி.
அனைத்திற்கும் மேலாக, இந்தப் பயணம் என் அம்மாவின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் அளப்பரிய ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
இன்று நான் அடைந்துள்ள இந்த நிலைக்கு அவரே காரணம். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணம் என் வாழ்வின் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணங்களில் ஒன்றாக எப்போதும் நிலைத்திருக்கும்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


