‘அரசியல் என் ஏரியா கிடையாது’: பிரபல யூடியூபர் நேர்காணலில் சிம்பு ஓபன் டாக் – தளபதி விஜய் குறித்து சிலிர்ப்பு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (Silambarasan TR), சினிமா, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிம்பு, தனது சிறுவயது முதலே தனது தந்தை டி.ராஜேந்தர் அரசியல் களத்தில் எதிர்கொண்ட சவால்களையும், கடினமான சூழ்நிலைகளையும் பார்த்து வளர்ந்ததால், தனக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், “அரசியலுக்கு வர இப்போது பெரிய கூட்டமே உள்ளது, எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், நடிகர் என்பதைக் தாண்டி மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றியைக் கொடுக்கும் என்றார். விஜய் சரியான பாதையில் பயணிப்பதாகவும், அவருக்குத் தகுந்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சிம்பு தனது நடுநிலையான கருத்தைப் பதிவு செய்துள்ளார். எவ்வித பாரபட்சமுமின்றி துணிச்சலாகக் கருத்துக்களைப் பேசுபவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.