“விமரிசனங்கள் என்னை பாதித்துள்ளது”: பொதுவெளி விமரிசனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்த நடிகர் துருவ் விக்ரம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான துருவ் விக்ரம் (Dhruv Vikram), சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொதுவெளியில் தான் சந்திக்கும் விமரிசனங்கள் குறித்து மிக ஆழமாகவும், வெளிப்படையாகவும் பேசியுள்ளார். திரைத்துறையில் நிலவும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இது குறித்து துருவ் விக்ரம் பேசுகையில், “நீங்கள் இந்தத் துறைக்கு வரும்போதே, பொதுவெளியின் விமரிசனங்களும் கவனமும் இதன் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேலை எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் மறுபக்கமும் பல கோணங்களைக் கொண்டுள்ளது. அவையனைத்தையும் ஏற்றுக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், உண்மை என்னவென்றால், இது என்னை பாதிக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. தனிப்பட்ட முறையில், யதார்த்தத்துடன் உங்களை இணைத்துக்கொள்வதும், நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வதும், நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதும், நீங்கள் நேசிக்கும் அனைவரையும் கடுமையாகப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது.
நீங்கள் உண்மையுடன் இணைந்து, உங்களை எது நிலைநிறுத்துகிறது என்பதை அறிந்துகொள்ளும்போது, விமரிசனங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உங்களை எதுவும் செய்ய முடியாது. ஆழ்மனதில், நீங்கள் உங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக்கொண்டு, சொந்தமாக உள்வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு தனிப்படை போல (Army of One) மாறக் கற்றுக் கொள்கிறீர்கள். உங்களால் முடிந்தவரை நீங்கள் நேசிக்கும் மனிதர்களுடன் ஒரு பாதுகாப்பான குமிழிக்குள் உங்களைப் பாதுகாத்துக் கொள்கிறீர்கள். அந்த வகையில் எனக்குக் கிடைத்த ஆதரவு என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது” என்று அவர் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


