தாய் மீதும், தாய் நாட்டின் மீதும்... - முதல்வர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நயினார் விளக்கம்
"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின்போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை.
தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


