‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வந்த நடிகை ஸ்ரேயா சரண் (Shriya Saran), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிவாஜி’ (Sivaji). இயக்குநர் ஷங்கர் (Shankar) இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியப் மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த்தை தான் முதல்முறையாகச் சந்தித்த தருணம் குறித்து ஸ்ரேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தன்னை அழைத்து இப்படத்தில் நடிக்கக் கேட்டதாகவும், அப்போது படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபோது அங்கு ரஜினிகாந்த், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் அமர்ந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தச் சூழலைப் பார்த்தபோதே இது ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இருக்கப் போகிறது என்பதை தான் உணர்ந்ததாகக் கூறியுள்ள ஸ்ரேயா, இயக்குநர் ஷங்கர் தன்னை நோக்கி வந்து, “இவர்தான் உங்களது சக நடிகர்” என்று ரஜினிகாந்த்தை தனக்கு அறிமுகம் செய்து வைத்த அந்தத் கணத்தை இன்றும் மறக்க முடியாது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

