ஏன் நீங்க நடிக்க வரணும்னு தான் முதல்ல கேட்டேன்.! - லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’.
கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியானப் பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அனிருத் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் லோகேஷ் கனகராஜ் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அனிருத், " லோகேஷும் நானும் பல வருடங்களாக பழகி வருகிறோம்.
தென்னிந்திய ரசிகர்களுக்கு எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
அதனால் அவர் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தெரிந்ததும், எனது முதல் ரியாக்ஷன் ஏன் நீங்க நடிக்க வரணும்? என்பதுதான் (சிரித்துக்கொண்டே).

ஆனால் இப்போது, குறிப்பாக இயக்குநர் அருணுடன் சேர்ந்து எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
லோகேஷைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சுதந்திரமாக செய்ய விடுவார்.
அவரிடமிருந்து கதையைக் கேட்பேன், அவர் எனக்கு கதை சொல்வார். மேலும் அவர் ஷூட் செய்யும்போதெல்லாம் சில காட்சிகளை எனக்குக் காட்டுவார்.
அதைத் தவிர, இசை விஷயத்தில் நாங்கள் பெரிதாக எதுவும் விவாதிப்பதில்லை. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடுவார்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

