கூடியது சட்டமன்றம்: `மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Live
பயிர் கடன் பேச அனுமதி மறுப்பு.!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயிர் கடன் தள்ளுபடி பற்றி சட்டசபையில் பேச வேணடும் என்றார் அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் காவிரி விவகாரத்தை பற்றி மட்டும் பேசவும் என பயிர் கடன் தொடர்பான பேச அனுமதி மறுத்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நான் எதையும் தவறாக பேசவில்லை விவசாயிகள் பயிர் கடனுக்காகவும் தான் போராடி வருகிறார்கள் என குறிப்பிட்டார்!
`மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன?
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், " மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது? மேகதாது அணைகட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தாதது ஏன்? முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது? மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? " என கேள்வி எழுப்ப்பினார்.
தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி எஸ். ஜானகி, இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்திற்கு பின்னர் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கேள்வி நேரம் முடிந்ததும் 2026 27 ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்டியல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். இந்த விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளிப்பார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


