நடிகர் மோகன் சர்மாவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதநேய செயல்!

தென்னிந்தியத் திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் சர்மா. இவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாயின. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாகத் தன் தரப்பு மூலம் மோகன் சர்மாவைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அடுத்த நாளே மருத்துவச் செலவுகளுக்காக ரூ.1 லட்சம் நிதியை அனுப்பி வைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த திடீர் மற்றும் மனிதநேயமிக்க உதவியால் நெகிழ்ந்துபோன மோகன் சர்மா, ரஜினிகாந்தை தனது “உயிர்நாடி” என்றும், தனது மானத்தைக் காப்பாற்றிய கடவுளின் அவதாரம் என்றும் கண்ணீர்ம மல்கக் கூறியுள்ளார். சினிமாவில் பல தசாப்தங்களைத் கடந்த ஒரு மூத்த கலைஞருக்குத் துயரக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்துள்ள இந்த உதவிக்கு சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரையுலகில் சக கலைஞர்களுக்குத் தேவைப்படும் தருணங்களில் ரஜினி தொடர்ந்து கைகொடுத்து வருவது பலமுறை நிருபணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


