டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு - விவரம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக எண்ட் டு எண்ட் என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மது பிரியர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் எங்கிருக்கின்றன, அங்கு என்னென்ன மது வகைகள் இருக்கின்றன மற்றும் அவற்றின் விலை என்ன என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலைத் தேர்வுசெய்து Google Pay போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் அவர்களின் செல்போனுக்கு ஒரு கியூஆர் குறியீடு அனுப்பப்படும்.

அதனை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பிக்கும் போது, ஊழியர்கள் அதைச் சரிபார்த்து உடனடியாய் மது பாட்டிலை வழங்கிவிடுவார்கள். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக மாவட்டந்தோறும் உள்ள சூப்பர்வைசர்களுக்கும், அதைத் தொடர்ந்து விற்பனையாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


