இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? - உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவது தொடர்பாகவும், அது குறித்து தவெக அரசு கடுமையாக எதிர்வினையாற்றாதது குறித்தும் தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு திமுக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.
அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசமாகப் பேசினார்.
இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
அண்ணாமலை பதிவு
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"நேற்று வைகை ஆற்றைச் சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்..." என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
— K.Annamalai (@annamalai_k) August 4, 2026
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


