கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!
தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து வரும் சூழலிலேயே இந்த நீர் திறப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவு மற்றும் கர்நாடகாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்ததால், கபினி அணையில் இருந்து கர்நாடகா சுமார் 10,000 முதல் 12,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


