CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனை படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச்சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

ப்ரீத்தி பவார்

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனைகள் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.

மகளிர் 54 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் அபாரமாகச் செயல்பட்ட ப்ரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, நடப்பு சாம்பியனான வட அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

ஜாஸ்மின் லம்போரியா
ஜாஸ்மின் லம்போரியா

ஒரே நாளில் குத்துச்சண்டையில் அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்திய அணி காமன்வெல்த் தரவரிசையில் தனது பதக்க வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.