கோவை: சட்டவிரோதமாக மின்வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் - துடிதுடித்து உயிரை விட்ட காட்டு யானை!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததின் காரணமாக, வனப்பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் குமார் என்பவர் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

காட்டு யானை

அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் காட்டு யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குமாரின் தோட்டத்தை பாக்யராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும், சட்ட விரோதமாக  உயர் அழுத்த மின்சாரத்தை மின்வேலியில் நேரடியாக செலுத்தியதே காட்டு யானை உயிரிழப்பிற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் குமார் மற்றும் குத்தகைதாரர் பாக்கிரராஜ் ஆகியோரைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.