பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை.! - சோனம் வாங்சுக் மனைவி சாடல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 26-வது நாளை எட்டியிருக்கிறது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் அங்கிருந்தே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.

சோனம் வாங்சுக்

இதனிடையே இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் இல்லம் அருகே நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை குண்டுகட்டாகத் தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உடன் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி பேசியிருக்கிறார்.

"பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழிப்படைந்த இந்தியா.

நேர்மையற்றவர்களை நாட்டின் இளைஞர்கள் தூக்கி எறிவார்கள். ஒவ்வொரு அரசியல் தலைவரும் வார்த்தைகளோடு நிற்காமல் அதைச் செயலில் காட்ட வேண்டும் என்பதை இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

இனி அவர்கள் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றவோ அல்லது நேர்மையின்றி நடக்கவோ முடியாது. எங்களைப் பொறுத்தவரை இங்கு எதிர்க்கட்சியும் இல்லை, ஆளும் அரசாங்கமும் இல்லை.

எங்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றமே நாட்டின் மிக உயர்ந்த அமைப்பு. நாடாளுமன்றம் கல்வியை ஒரு அடிப்படைப் பிரச்சனையாகக் கருதி கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

சுயநல நோக்கங்களுடன் யார் வந்தாலும் அவர்கள் வழியிலேயே வீழ்வார்கள். ஏனெனில் இந்த இயக்கம் தூய்மையான எண்ணத்திலிருந்தும் நேர்மையிலிருந்தும் உருவானது"என்று எதிர்கட்சியை சாடியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.