ஆயிரம் பிரச்னை இங்க இருக்கு அதை..!- டெல்லி போராட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் என்ன?

போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் சங்ககிரியில் இன்று (ஜூலை.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இங்கு இருக்கும் பிரச்னையை பாருங்கள். அதை அவர் பார்த்துப்பார். சங்ககிரிக்கு வந்திருக்கிறேன்.

ஆயிரம் பிரச்னைகள் இங்கு இருக்கிறது. பேருந்து வரவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜன நாயகன் விஜய்

இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும். பாதியிலேயே நிற்கும் பணிகள் நிறைய இருக்கிறது. அதனைத் திறம்பட மக்களுக்கு செய்து தர வேண்டும். அவர்கள் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பான கேள்விக்கு, "இதனை ஒரு பண்டிகை மாதிரி பார்க்கிறோம். இந்தப் படத்தில் நான் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது பொற்காலம்" என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.