FIFA: வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும் - தோல்வி குறித்து மெஸ்ஸி எமோஷனல்

ஸ்பெயின் - அர்ஜெண்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.

ஸ்பெயின்

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு பின் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் உடைந்து அழுதார். இந்நிலையில் மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும். இருப்பினும் இதில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் நினைவில் கொள்வேன்.

நமது அணியின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, நம்மை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கொண்டு வந்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்.

மெஸ்ஸி
மெஸ்ஸி

நாங்கள் சாதித்ததை இன்று மதிப்பிடுவது கடினம் என்றாலும், இந்த அணி தொடர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டும்.

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அர்ஜெண்டினியனாக பெருமை கொள்கிறேன். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.