தருமபுரி : அவனைக் காண நானும் செல்கிறேன் - பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்-லட்சுமி தம்பதியின் மகள் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த மாணவி, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டிலுள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிக்க சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
தற்கொலை

அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் பாட புத்தகத்திலிருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில், என்னுடன் படித்த மாணவனுடன் பழகி காதலித்து வந்தேன். சமீபத்தில் அவன் தற்கொலை செய்துகொண்டான், அதனால் இந்த உலகில் வாழ விரும்பவில்லை. அவனைக் காண நானும் செல்கிறேன் என எழுதியுள்ளார்.

மாணவன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டான் என்பது தெரியாத நிலையில், அந்த துயரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மையம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.