சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.92-93 என வலுவான இந்திய ரூபாயின் மதிப்பு, இப்போது மீண்டும் ரூ.96-ஐ தாண்டி சறுக்கியுள்ளது.

என்ன காரணம்?

இந்தச் சறுக்கலுக்கு ஈரான் போர் மிக முக்கியக் காரணம். ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.

இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதிதான் செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய ரூபாய்

இதனால், இந்தியாவிற்கு டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதுவும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவிற்கு ஒரு காரணம்.

இன்னொரு பக்கம், இந்தியாவின் எண்ணெய் சார்பு, இந்திய ரூபாய் மதிப்பின் சறுக்கல் போன்றவற்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றுகிறார்கள்.

இதனாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சறுக்குகிறது.

இந்த ஆண்டே இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.99, 100-ஐ தாண்டிவிடும் என்கிற கணிப்புகள் இருந்த வேளையில், ரூ.93-97-க்குள்ளேயே சுழன்று வருகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதைக் காட்டுகிறது.

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.