பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; 120- க்கும் மேற்பட்டோர் காயம்
ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று (ஜுலை.16) காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த பிரமாண்ட ஆன்மிக விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டிருக்கின்றனர்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், கோயிலுக்கு வெளியே திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
மேலும் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
#Puri Rath Yatra Chaos: One Dead, Scores Injured in Stampede-Like Situation
— Thepagetoday (@thepagetody) July 16, 2026
During Lord Jagannath's chariot procession in Puri on July 16, massive crowds triggered a stampede-like crush. One devotee died and over 100 others were injured or hospitalized as devotees surged near… pic.twitter.com/ctYIrQ49uZ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


