`தீர்ப்பு சாதகமா வரணும் - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு தூவி பில்லிசூனியம் வைத்த பெண்
சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்ளை எள் விதைகளைத் தூவி பில்லிசூனியம் வைத்த குற்றச்சாட்டின் பேரில், 65 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சுளா என்ற அந்த பெண் நீதிமன்றத்தின் முதல் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் டயஸ் நாற்காலி மற்றும் மேஜையின் மீது மந்திரித்த வெள்ளை கடுகு விதைகளைத் தூவினார்.
நீதிபதியின் நாற்காலி மற்றும் மேசையைச் சுற்றி வெள்ளைக் கடுகு விதைகள் சிதறிக் கிடப்பதைக் கவனித்த நீதிமன்ற ஊழியர்கள், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் எனச் சந்தேகித்து, அப்பகுதிக்குள் நுழைந்தவர் யார் என்பதைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் மஞ்சுளா நீதிமன்ற அறைக்குள் நுழைந்து இக்காரியத்தை செய்திருந்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
அப்பெண்ணிடம் விசாரித்தபோது விசாரணைக்கு வரவிருக்கும் தனது நிலத் தகராறு சிவில் வழக்கில், நீதிபதியின் முடிவை மாற்றி தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறலாம் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தின் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவான இந்த அசாதாரண செயல் தொடர்பாக பில்லி சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மஞ்சுளா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நேத்ரா அளித்த புகாரில், வழக்குத் தொடர்புடையவர்கள் அமரும் பகுதியில் இருந்த அந்தப் பெண், விசாரணை தொடங்குவதற்குச் சற்று முன்பு நீதிபதியின் மேஜை அருகே சென்று விதைகளைத் தூவிவிட்டு, அமைதியாக நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுவது கண்காணிப்பு கேமரா பதிவில் காணப்பட்டது. நீதித்துறை நடவடிக்கைகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது ஒரு அரிதான நிகழ்வாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


