காசியில் பாக்கியஸ்ரீ செய்த லஸ்ஸி ஊழலா? பொங்கி எழுந்த நடிகை – நெட்டிசன்களுக்கு செருப்படி பதில்!

திரைத்துறையில் ஒரு நடிகை பொதுவெளியில் உணவு உண்பது கூட இன்று சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் காசியில் உள்ள புகழ்பெற்ற ‘பெஹல்வான் கி லஸ்ஸி’ கடைக்குச் சென்ற நடிகை பாக்கியஸ்ரீ, அங்கு அவர் லஸ்ஸி குடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது ஒரு போலியான விளம்பரம் என்றும், உடல் நலன் மற்றும் சர்க்கரை அளவு குறித்துப் பயந்து அவர் லஸ்ஸியை முழுமையாகக் குடிக்கவில்லை என்றும் மோசமாக விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு சாதாரண செயலைக் கூட சர்ச்சையாக்கும் இத்தகைய போக்கை நடிகை பாக்கியஸ்ரீ மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளார்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள பாக்கியஸ்ரீ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். “காலை 3 மணிக்கு எழுந்து மங்கள ஆரத்தி, அதன்பின் கடும் வெயிலில் கங்கை கரையில் நீண்ட தூரம் நடந்த பிறகு, இந்த லஸ்ஸி எனக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தந்தது. அதன் மேல் தூவப்பட்டிருந்த உலர் பழங்களின் சுவையும் மிகவும் நன்றாக இருந்தது. இனிப்பு அல்லது உப்பு என்பது தனிப்பட்ட விருப்பம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனிப்பைத் தவிர்க்கலாம், அது சரிதான். ஆனால் தயிர் என்பது கால்சியம், புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவு. சர்க்கரை அல்லது வெல்லம் ஆற்றலைத் தரும், தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். 40 டிகிரி வெப்பத்தில் எனக்கு இதுவே சரியான கலவையாக இருந்தது,” என்று அவர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhagyashree (@bhagyashree.online)

தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் விடுத்துள்ள பதில் மிகவும் காட்டமாக உள்ளது. “அங்கே நீங்கள் இருந்தீர்களா? லஸ்ஸி இனிப்பாக இருக்கிறது என்று நான் சொன்னதாக எங்காவது ஆதாரமிருக்கிறதா? அல்லது நான் குடிக்கமாட்டேன் என்று சொன்னதை யாராவது பதிவு செய்தீர்களா? பாதி வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு, அரைகுறை அறிவுடன் பதிவிடுவதுதான் போலி. உள்ளூர் உணவுகளைப் பரப்புவதால் எனக்குப் பணம் கிடைக்கப்போவதில்லை; ஆனால் இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு கிடைக்கும். இதுதான் அதன் நோக்கம். காசி என்பது தூய்மையான இடம், அங்கே வந்து இத்தகைய சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களை முன்வைப்பது வருத்தமளிக்கிறது,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றித் தெரியாமல் விமர்சிக்கும் இந்தத் கலாச்சாரம் இன்று எத்தகைய எல்லைக்குச் சென்றுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நடிகை பாக்கியஸ்ரீ கடைசியாக ரித்தேஷ் தேஷ்முக் இயக்கிய ‘ராஜா சிவாஜி’ படத்தில் ராஜமாதா ஜிஜாபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தற்போது நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பாக்கியஸ்ரீயின் இந்த அதிரடியான பதில், சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.