மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார்.

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.

விசிக தலைவர் திருமாவளவன்

இது​வரை நான் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​ட​ணி​யில் இருக்​கிறோமோ என்றும் அறிவிக்​க​வில்​லை. ஒரு​வேளை தவெக தலை​மை​யில் கூட்​டணி உருவா​னால், அதில் இடம்​பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்​லை.

திமுக தலை​வர்​கள் அனை​வரும் ஒன்​று சேர்ந்து விசிக​விலிருந்து ஒரு​வரை அழைத்து கட்​சி​யில் இணைத்​த​போது, திமுக தலை​மையே எங்​களு​டன் உறவு இல்லை எனச் சொல்​லி​விட்​டது. விசிக​வுடன் கூட்​டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டா​லின் தான்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், "அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.