தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்?- அதிமுக எம்.பி இன்பதுரை

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர்.

குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்திருக்கின்றனர்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக எம்.பி இன்பத்துரை, " எங்களின் புகாரில் ஆளுநர் உரிய நடடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்? அதை அனுமதிக்க மாட்டேன் என தவெக ஆட்சி அமைக்கும் முன்பே அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.

குதிரை பேரம் நடைபெறுவது அப்பட்டமாக தெரிந்தும் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது. அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது" என்று கூறியிருக்கிறார்.

அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி
அதிமுக கொறடா கிருஷ்ணமூர்த்தி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, " அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்.

அதிமுக எம்எல்ஏ-களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தவெக. ஆளுநரின் அதிகாரத்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.