தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரான இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பி.டி.அரசகுமார்

அந்தப் புகாரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் தனக்கு இருக்கும் அரசியல் மற்றும் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

இதை நம்பி தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமான தனியார் பள்ளி நிர்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

இப்புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வந்த பி.டி.அரசகுமாரை போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.