Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை

அதன் பிறகு, 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களைக் காங்கிரஸ் கட்சி, தி.மு.க-வுடனான கூட்டணியில் சந்தித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனையுடன் ஆதரவளித்தது. பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ராஜேஷ்குமாரும் விஸ்வநாதனும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

Press Release - Manickam Tagore Appointment
Press Release - Manickam Tagore Appointment

தேர்தலுக்கு முன்பிருந்தே, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டு வந்தது. கூடிய விரைவில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாணிக்கம் தாகூர் புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.