திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், ​லால்குடி ஆங்கரை தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் தி.மு.க பிரமுகரான கிறிஸ்துராஜா என்பவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர்.

காலை தொடங்கிய இந்தச் சோதனையானது, 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது. ​இந்த அதிரடி சோதனையின் போது, கிறிஸ்துராஜாவின் வங்கிப் பரிவர்த்தனைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

raid

நீண்ட நேர விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு, தங்களுக்குத் தேவையான ஒருசில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ​

அரசு வேலை விஷயத்தில் நடைபெற்ற முறைகேடு சம்மந்தமாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தி.மு.க பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.