ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ் கருத்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தமிழக மக்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர்.அதேநேரத்தில் தமிழகத்தை ஆளும் கட்சிக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது.

தமிழகத்தில் திமுக ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வருவதற்கும் ஏணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்தான். ஆட்சிக்கு வந்தபின் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாங்கிப் பிடிப்பவர்களும் அவர்கள்தான். ஆனால், அவர்களே திமுக அரசை இப்போது சபிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.