தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம் பரிகாரம்

தீராத பண பிரச்சனை, கடன் பிரச்சனை, இந்த இரண்டும் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் குடும்பப் பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்காது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, என்றைக்கு ஒரு முடிவை கட்டுகின்றோமோ, அன்றைக்கு தான் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். இப்படி உங்களுடைய வீட்டிலும் பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கிறதா.

உங்களால் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியவில்லையா. தீர்க்கவே முடியாத பணம் சம்பந்தப்பட்ட, கடன் சம்பந்தப்பட்ட, குடும்ப பிரச்சனையிலிருந்து விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கிறீர்களா. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஒரே ஒரு எலுமிச்சம் பழமும், இந்த ஒரு பரிகாரமும் தெரிந்தால் போதும். ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் தீரும். கடன் சுமைக்குறையும். அதே சுமையும் தீர்க்க முடியாத குடும்ப பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

கடன் சுமை குறைய எலுமிச்சம் பழ பரிகாரம்

ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உங்களுடைய கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு, உங்களுடைய கடன் சுமையெல்லாம் குறைந்துவிட்டது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டீர்கள். வருமானம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது.

சந்தோஷமாக உங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வதாக மனசுக்குள்ளேயே மானசீகமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். நல்லபடியாக உங்களுடைய வாழ்க்கை இப்போது மாறிவிட்டது. அப்படித்தான் உங்களுடைய மனதிலும், மூலையிலும் சிந்தனை இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கண்களை மூடி இப்படி நல்லபடியாக பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாதி எலுமிச்சம் பழத்தை உங்களுடைய உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரை அப்படியே தேய்த்தபடி, மேல் பக்கத்திலிருந்து கீழ் பக்கமாகதேய்த்து, அந்த எலுமிச்சம் பழத்தை குப்பையில் போட்டு விட்டு, தலைக்கு குளித்துவிட்டு வந்து விடுங்கள். எப்போதும் போல சோப்பு ஷாம்பு போட்டு குளிக்கலாம். குளித்து வந்த பிறகு, மீதி பாதி எலுமிச்சம் பழத்தை அறுத்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அதில் சாறு எடுத்து குடித்து விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம்.

இந்த பரிகாரம் என்ன செய்யும். உங்களுடைய உடம்புக்கு மேலே இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டிகளையும் விலக்கி விடும். சாறாக எடுத்து உள்ளே பருகிய எலுமிச்சம்பழம்  உங்களுடைய உள் பக்கத்தில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிட்டு, நேர்மறையான ஆற்றலை உங்களுக்குள் கொடுத்து விடும்.

இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி எல்லாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களோ, அப்படிப்பட்ட வாழ்க்கையை கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு கிடைத்து விடும். எளிமையான எலுமிச்சம்பழம் பரிகாரம் இது. வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்யுங்கள்.

குளிப்பதற்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அப்பதானே உங்களுக்கு இந்த எலுமிச்சம் பழத்தை தேய்த்து குளிப்பதற்கு வசதியாக இருக்கும். மீதி பழத்தை அப்படியே வைத்து விட்டு போங்க. குளிச்சிட்டு வந்து அந்த பழத்தை சாறு எடுத்து குடிச்சிருங்க.

இதையும் படிக்கலாமே: தங்கம் கிடுகிடுன்னு சேர பரிகாரம்

வாரத்தில் ஒரு நாள் என்ற கணக்கில் மூன்று வாரம் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உணவீர்கள். பிரச்சனைகள் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம் பரிகாரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.