இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. வனத்​துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தலைமை தாங்​கி, 333 வனப் பணி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். அதைத் தொடர்ந்து இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடலோர சூழல் அமைப்​பு​களைப் பாது​காக்​க​வும், நிலை​யான வாழ்​வா​தா​ரங்​களை உரு​வாக்​கும் வகை​யிலும் ஏற்​படுத்​தப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​து, அறக்​கட்​டளை​யின் இலச்​சினை மற்​றும் சிறப்பு புத்​தகத்தை வெளி​யிட்​டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.