இன்று காலை கோயிலை அடைகிறார் கள்ளழகர்: உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நாளை நிறைவு
மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நேற்றிரவு மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்களிடமிருந்து விடைபெற்று அழகர்கோவில் மலைக்குப் புறப்பட்டார். இன்று (மே 16) காலை கோயிலை அடைகிறார்.
மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்க அழகர்கோயிலிருந்து கடந்த மே 10-ம் தேதி மதுரை புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.