காயத்துக்கு தையல் போடுவதற்கு பதில் ஃபெவிகுவிக் பயன்படுத்திய செவிலியர் பணியிடை நீக்கம்
கர்நாடகாவில் சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிகுவிக் பயன்படுத்தி ஒட்டிய அரசு செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹடூரை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சிறுவனின் பெற்றோர் ஹடூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த செவிலியர் ஜோதி சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஃபெவிகுவிக் கொண்டு ஒட்டியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.