வக்ஃபு மசோதா குழு: ஆ.ராசா, ஒவைசி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜக்தாம்பிகா பால் விரைவாக நடவடிக்கைகளை நிறைவு செய்ததாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஆ.ராசா, கல்யாண் பானர்ஜி, ஒவைசி உள்பட 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, கல்யாண் பானர்ஜி, முகம்மது ஜாவேத், நசீர் ஹுசைன், மொகிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் ஸ்வாந்த், நதீம் உல் ஹக் மற்றும் இம்ரான் மசூத் உள்ளிட்டவர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்ளை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாஜகவின் நிஷிகந்த் துபே கொண்டுவந்தார். பின்பு அது குழுவினரால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.