சுற்றுலா பொருட்காட்சியை காண மக்கள் ஆர்வம்: சென்னை தீவுத்திடலில் 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்த்தனர்
சென்னை: தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் 49- வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து, நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய, மாநில அரசுத்துறை அரங்குகள், தனியார்துறை அரங்குகள் என 84 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் போன்றவை உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.