ஆரோக்கியமா இருக்கா ‘ஆசிரியர் மனசு’ திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ் கவனத்திற்கு... 

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள்.

‘ஆசிரியர் மனசு’ திட்டத்​திற்காக திருச்​சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஸ், திட்டத்தின் மாநில ஒருங்​கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்​தார். இவரை மையப்​படுத்​தித்தான் இப்போது சர்ச்​சைகளும் வெடித்துள்ளன. செல்வாக்கு, பணம் பலம், லாபி செய்யும் ஆசிரியர்​களின் கோரிக்கைகள் மட்டுமே கவனிக்​கப்​படு​கிறது. இதனால் இந்தத் திட்டத்தின் நோக்கமே திசைமாறிப் போய்க் கொண்டிருக்​கிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.