கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 15-ம் தேதி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள கே.வாசுகி, வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை வாசுகிக்கு பொது நிர்வாக (அரசியல்) துறை உதவும். மேலும் டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்வதற்கு டெல்லி கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.