தொடரும் கனமழையில் மும்பை தத்தளிப்பு; பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மும்பையின் மத்திய பகுதியில் சராசரியாக 78 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு மும்பையில் முறையே 57 மிமீ மற்றும் 67 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால், மும்பையின் பொதுப் போக்குவரத்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டன. இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் புறநகர் ரயில் சேவைகள் தாமதமாக 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.